தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP), வாழ்ந்து காட்டுவோம் திட்டமாக அறியப்பட்டது, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் தொழில்களை புதிய வடிவில் புத்தாக்கம் செய்யும் இலட்சியத்துடன் செயல்படும் திட்டமாகும். உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படும் இத்திட்டம் வறுமை ஒழிப்பையும் தாண்டி வளத்தை உருவாக்குவதாகும். இத்திட்டம் கீழ்காணும் கூறுகளுடன் ஊரகப் பகுதி சமூகங்களுக்கு நிலையான வளத்தை உருவாக்கி வருகின்றது.    

  • ஊரகத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்: இத்திட்டம் ஊரகப்பகுதிகளின் தொழில்களை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், பெண் தொழில்முனைவோருக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்குமான பாதையை வழங்குகிறது.
  • நிதி வழங்கலை மேம்படுத்துதல்: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரகப் பகுதி சமூகங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய நிதியுதவிப் பெறுவதை உறுதிச் செய்கின்றது. இதில் குறுந்தொழில்கள், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பிற நிதித் திட்டங்கள் உள்ளடங்கும்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்: இந்த திட்டம், தனிநபர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு திறன் மற்றும் வளங்களை வழங்கி, ஊரகப்பகுதிகளில் உள்ள வேலையின்மை சவாலை நிவர்த்தி செய்கின்றது.

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், TNEPRP, TNSRLM, மற்றும் NRLP திட்டங்களின் பலத்தை பயன்படுத்தி வருகின்றது. இந்த கூட்டு திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகலின் மூலம் ஊரகப் பகுதிகளில் வியப்பூட்டும் புத்தாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை இயக்கம் (அ) StartupTN, தமிழ்நாடு அரசு திட்டமானது தமிழ்நாட்டில் புத்தொழில் பசுமை அமைப்பில் வளர்ச்சியை ஊக்குவிக்க நிறுவப்பட்டுள்ளது.    MSME துறையின் கீழ் செயல்படும் StartupTN ஒரு ஊக்கியாக செயல்படுகிறது, ஆர்வமுள்ள தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து புதுமைக்கான செழிப்பான இயக்கத்தை வளர்க்கிறது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-23 ஆம் ஆண்டுகளின் பலத்துடன் StartupTN, தமிழ்நாட்டில் புத்தொழில்களைப் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவுகளை வழங்குதல். இத்திட்டத்தின் முக்கியப் பணியானது கீழ்காணும் சேவைகளை வழங்குதலாகும்:

  • நிதி வழங்கல்: Tanseed நிதி, StartupTN திட்டங்களின் வழியாக நிதியுதவிகளை வழங்கி புத்தொழில்களை ஊக்குவித்தல்.
  • வழிகாட்டுதல் கூட்டிணைப்பு: இதன் மூலம் புத்தொழில்களை இணைத்து அனுபவம் வாய்ந்த வழிகாட்டுநர்கள், தொழிற்துறை தலைவர்கள் வழியாக பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கி இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • கொள்கை ஆதரவு: StartupTN திட்டம், தொழில்களை எளிதாக நடத்தும் கொள்கைகளை ஊக்குவித்து புத்தொழில் வளர்ச்சிக்கு ஆற்றலை வழங்குதல்.
  • கட்டுமானம் மற்றும் ஆதரவு: புத்தொழில்களை. தொழில்காக்கும் நிறுவனங்களுடன் இணைத்து, இணை பணியிடம் மற்றும் தொழில் வெற்றிக்கான தேவையான வசதிகளைத் தருதல்.  

புதுமையை வளர்த்தல் மற்றும் தொழில்முனையும் பராமரிப்பதன் மூலம், இந்தியாவில் தமிழ்நாட்டை புத்தொழில்களின் மையமாக உருவாக்க StartupTN ஆர்வம் கொண்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), தமிழ்நாடு அரசின் ஓர் சிறந்த அர்ப்பணிப்பு முயற்சியாகும். இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 2012-13 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் நிதியுதவியில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் அடிப்படை நிலையிலுள்ளோரை உயர்த்தவும், தேவைப்படுவோருக்கு நிதியாதரவை வழங்கவும் செயல்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் பணியானது, ஊரக சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த குழுக்கள் கீழ்காணும் கூறுகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

 

  • சேமிப்பு மற்றும் குறுநிதி: சுயஉதவிக் குழுக்களில் மேம்படும் உறுப்பினர்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்கவும், குறுங்கடன்களைப் பெறுவதற்கும், வருவாய் உருவாக்க செயல்பாடாக அமைக்கப்பட்டுள்ளது.

  • வாழ்வாதார மேம்பாடு: TNSRLM திட்டம், தமது திட்டப்பயனாளர்களுக்கு தொழிற் திறன்களை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, புதிய தொழில் தொழில் நிறுவனங்களையும் உருவாக்கி வருகின்றனது.
  • சந்தை இணைப்புகள்: இந்த திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்திச் செய்யும் பொருட்களை விற்பனைச் செய்வதற்கு சந்தை இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சிறந்த வணிக பாலத்தை அமைக்கிறது

TNSRLM திட்டத்தின் இலட்சியம், நிதி மேம்பாட்டினையும் தாண்டி, வாழ்வின் வளத்தை உருவாக்குகிறது. 

இதன் இலக்கானது:

  • சமூக உள்ளீடை ஊக்குவித்து ஊரக சமூகங்களின் ஒட்டுமொத்த மேம்பாடும் வழங்குதல்
  • சமூகப் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் முடிவெடுக்கும் உரிமை வழங்கல்
  • ஊரகப் பெண்களிடம் நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் குடும்ப சவால்களை எதிர்கொள்ளச் செய்தல்

நிதி சுதந்திரத்திம், திறன் மேம்பாடு மற்றும் சந்தை இணைப்புகளை வழங்கும் TNSRLM திட்டம், ஊரகப் பகுதி மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளமான தமிழ்நாட்டுக்கு வழிவகுக்கின்றது. 

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் (TNULM), தமிழ்நாட்டின் நகர்ப்புற ஏழை எளிய குடும்பத்தாரை உயர்த்த உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டம் 2014-15 ஆண்டில் தொடங்கப்பட்டு நலிவுற்றோரின் வறுமையை ஒழித்து, வலிமையான சமூக நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இதன் வழியாக வெற்றிகரமான வேலைவாய்ப்புகள் (அ) திறனுயர்ந்த கூலி வேலைக்கு திறன் மிகுந்த குடும்பத்தாராக மேம்படுத்தப்பட்டுள்ளனர்.

சமூகத்தினரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, சுயஉதவிக் குழுக்கள் (SHGs) வழியாக நிதி பாதுகாப்பை ஊக்குவித்து, பகிர்ந்து முடிவெடுக்கும் வழிமுறையை ஊக்குவித்து வருகின்றது.

இவ்வியக்கம் நகர்புற வாழ் மக்களின் குறிப்பிட்ட தேவைகளான நகர வீதி வியாபாரிகள் மற்றும் வீடற்றோருக்கு உதவி புரிந்து, வியாபாரத்திற்கு ஏற்ற விற்பனை இடத்தை வழங்கியுள்ளது. நிதி நிறுவனங்களின் கடன்கள், சமூக பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் வாழ்வாதார திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்